உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிக்கு தொல்லை வாலிபர் கைது

சிறுமிக்கு தொல்லை வாலிபர் கைது

கடலுார் : கடலுார் அருகே எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 22வயது வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.கடலுார் அடுத்த தியாகவல்லி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சின்னதுரை, 22. ஐ.டி.ஐ., மாணவர். இவர் நேற்று காலை 8:.30 மணிக்கு கடலுார் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுமியை, சாக்லேட் தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். தாய் அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார், சின்னதுரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ