மர்ம காய்ச்சலால் வாலிபர் பலி
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் மர்ம காய்ச்சலால் வாலிபர் இறந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தின் அருகே வசித்து வந்த 25 வயதுள்ள இளைஞருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது.கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று முன்தினம் இறந்தார். இறந்த வாலிபர் டெங்கு காய்ச்சால் இறந்திருக்கலாம் என்ற பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லிகுப்பம் நகராட்சி கொசு மருந்து அடிக்க வேண்டும், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.