கத்தியுடன் சுற்றிய சைக்கோ வாலிபர்
கத்தியுடன் சுற்றிய சைக்கோ வாலிபர்தர்மபுரி :தர்மபுரி அருகே, இலக்கியம்பட்டி பகுதி தெருக்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு கையில் கத்தியுடன் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அங்குள்ள வீட்டின் கேட் மற்றும் கார் கதவுகளை, கத்தியால் தட்டி கொண்டே சென்றதால் மக்கள் அச்சடைந்தனர். இரவு ரோந்திலிருந்த போலீசார் அங்கு வந்து, அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவர் சைக்கோ என தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடமிருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.