உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பராமரிப்பின்றி நீர்நிலைகள் பாதுகாக்க வலியுறுத்தல்

பராமரிப்பின்றி நீர்நிலைகள் பாதுகாக்க வலியுறுத்தல்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் எளையாம்பாளையம், சில்லாங்காடு, மோளகவுண்டம்பாளையம், மாம்பாளையம், எலந்தகுட்டை உள்ளிட்ட பல பகுதிகளில், ஏரி, நீர்தேக்கம், தடுப்பணை போன்ற நீர்நிலைகள் உள்ளன. அதிகளவு மழை பெய்தால், இந்த நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து சேரும்; இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். ஆனால், தற்போது பெரும்பாலான நீர்நிலைகள் பராமரிப்பின்றி முட்புதர் வளர்ந்து காணப்படுகிறது. குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு கொட்டப்பட்டுள்ளன. எனவே, நீர்நிலைகளை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை