உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு பள்ளி ஏ.ஹெச்.எம்., மீது வழக்கு

ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு பள்ளி ஏ.ஹெச்.எம்., மீது வழக்கு

ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவுபள்ளி ஏ.ஹெச்.எம்., மீது வழக்குகிருஷ்ணகிரி, நவ. 8-ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், உதவி தலைமை ஆசிரியர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, பெரியார் நகரை சேர்ந்தவர் சச்சிதானந்தம், 57; கொம்மம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர். இவரது மனைவி அதே பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக சித்ரா, 39, பணிபுரிகிறார். இவரிடம் சச்சிதானந்தம் ஆபாசமாக பேசி வந்துள்ளார். கடந்த மாதம், 29ல் பணியில் இருந்த சித்ராவை, மொபைல்போனில் அழைத்த சச்சிதானந்தம் 'மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதாகவும், வீட்டுக்கு வரவேண்டும்' என்றும் கூறியுள்ளார். அதேநாளில் அவரது மனைவியான தலைமை ஆசிரியை பணிக்கு வந்திருந்தார். இதனால் சந்தேகமடைந்த சித்ரா, தன் கணவரிடம் கூறியுள்ளார். 'அங்கு சென்றவுடன் தனது மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு ஆனிலேயே வைத்திரு. நான் அங்கு வருகிறேன்' என்று கூறியுள்ளார்.சச்சிதானந்தம் வீட்டுக்கு சென்ற சித்ரா, வீட்டில் யாரும் இல்லாததால், மொபைல் போனில் கணவரை தொடர்பு கொண்டு, போனை ஆப் செய்யாமல் வைத்தார். இது தெரியாத சச்சிதானந்தம், சித்ராவிடம் ஆபாசமாக பேசி, பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அவரிடமிருந்து தப்பிய சித்ரா, ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். இதன்படி விசாரித்த போலீசார், சச்சிதானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ