உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நான்கு வழிச்சாலை பணிகளைவிரைந்து முடிக்க அறிவுறுத்தல்

நான்கு வழிச்சாலை பணிகளைவிரைந்து முடிக்க அறிவுறுத்தல்

அரூர்:முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், திருவண்ணாமலை - அரூர் (வழி) தானிப்பாடி வரை, 35 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு வழிச்சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. அதே போல், இந்த சாலையில் நரிப்பள்ளி கல்லாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணிகளை ஆய்வு செய்த சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின் போது, கோட்டப்பொறியாளர், உதவி கோட்டப்பொறியாளர், உதவிப் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை