உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி

திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி

கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், குந்துமாரனப்பள்ளி கிராமம் ஆஞ்சநேயர் கோவிலை நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வாலிபர் ஒருவர் நோட்டமிட்டபடி இருந்தார். இதைப்பார்த்த மக்கள் திருட வந்திருப்பதாக நினைத்து வாலிபரை பிடிக்க முயன்றனர். தப்பியோடிய நிலையில், நேற்று காலை மீண்டும் கோவில் அருகே வந்தார். இதனால் மக்கள் அவரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். கெலமங்கலம் போலீசார் வாலிபரை மீட்டு விசாரித்தனர். ஓசூர் அருகே கோபனப்பள்ளியை சேர்ந்த தொழிலாளி சேகர், 22, என தெரிந்தது. யாரும் அவர் மீது புகார் கொடுக்க முன்வராததால், எழுதி வாங்கி கொண்டு அவரை எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி