வருடாபிஷேகவிழா
வடமதுரை, மே 24- வடமதுரை போஜனம்பட்டியில் விநாயகர், முருகன், மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் வருடாபிஷேகம் நடந்தது. துாங்கணம்பட்டி வெங்கடேசப் பெருமாள் கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் யாக பூஜைகளை நடத்தினர். பேரூராட்சி கவுன்சிலர் கணேசன், தி.மு.க., நிர்வாகிகள் சந்தானம், செல்வகுமார், சுப்பையா பங்கேற்றனர்.