நலத்திட்டம் வழங்கல்
வேடசந்துார், மே 30 -- பாரதிநகர் ஞான ஒளி பார்வையற்றோர் ,ஊனமுற் றோர் மறுவாழ்வு நல சங்கத்தில் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார். பங்கேற்ற 60 நபர்களுக்கு நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. ஆத்துமேடு ஆறுமுகசாமி அன்னதானம் வழங்கினார்.