உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 75 பறிமுதல் வாகனங்கள் ஏலம்

75 பறிமுதல் வாகனங்கள் ஏலம்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு தடுப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட 75 வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு தடுப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட 3 டூவீலர்கள், கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள், 63 டூவீலர்கள் என மொத்தம் 75 வாகனங்கள் ஜூன் 13ல் (நாளை மறுநாள்) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொதுஏலம் விடப்படுகிறது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஜூன் 12 (நாளை) மாலை 6:00 மணிக்குள் திண்டுக்கல் மதுவிலக்கு டி.எஸ்.பி., அலுவலகத்தில் டூவீலர்களுக்கு ரூ.5 ஆயிரம், மூன்று, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தி பதிவு செய்து அனுமதிச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி., ஏல முழுத்தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். சந்தேகம், விவரங்களுக்கு 78453 85637ல் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை