உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இருதரப்பு மோதல்: மூவருக்கு கத்திக்குத்து

 இருதரப்பு மோதல்: மூவருக்கு கத்திக்குத்து

நத்தம்: நத்தம் அருகே சிறுகுடி- தேத்தாம்பட்டியை சேர்ந்த சிவா 27, இந்திரா நகர் பிரதீப் 23, இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் பிரதீப், சந்தோஷ் தங்களது நண்பர்களுடன் தேத்தாம்பட்டிக்கு சென்று சிவா, அவரது உறவினர்கள் சிவமணி 25, சிவப்பிரகாசம் 24, ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டதில் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சிவமணி, சண்டையை விலக்க வந்த சின்னச்சாமி, சக்தி ஆகியோரை கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிவமணி தரப்பினர் தாக்கியதில் இந்திரா நகர் சரவணன், பொன்னையா, அருண்குமார் ஆகியோர் படுகாயமடைந்து நத்தம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை