தீ தடுப்பு ஒத்திகை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு, மீட்புபணிகள் துறை சார்பில் தனியார் நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு தீ தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு வகுப்பு, செயல்முறை பயிற்சி ஒத்திகை தீயணைப்பு மீட்பு நிலையத்தில் நடந்தது. மாவட்ட அலுவலர் விவேகானந்தன் தலைமை வகித்தார்.உதவி மாவட்ட அலுவலர் தலைமையிலான மீட்பு குழுவினர்பயிற்சி அளித்தனர்.