தீ தொண்டு நாள் அனுசரிப்பு
வேடசந்துார்: தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் பணியில் இருக்கும் போது இறந்தவர்கள் நினைவாக தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. வேடசந்துார் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் இறந்தவர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.