உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

 பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் 38வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் தனலட்சுமி அம்மாள் தலைமை வகித்தார். முதன்மை தலைவர் ரகுராம், அறங்காவலர்சூர்யா, கணினி அறிவியல் பொறியியல் துறை தலைவர் சாந்தி, கணினி அறிவியல் வணிக அமைப்புகள் துறைதலைவர் பவளராஜன் முன்னிலை வகித்தனர். முதல்வர் வாசுதேவன் வரவேற்றார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன கல்வித்துறை கூட்டமைப்பின் தலைவர் சுசீந்திரன் பேசினார். கணினிஅறிவியல் இன்ஜினியரிங், கணிணி அறிவியல் வணிக அமைப்புகள் துறைகளை சேர்ந்த 306 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். இன்ஜினியரிங் தேர்வு தரவரிசை பட்டியலில் இருதுறைகளில் முதல் 3 இடங்களை பெற்ற இளநிலை மாணவர்களுக்கு கல்லுாரி சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.வளாக வேலைவாய்ப்பின் மூலம் மாணவர்கள் பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை