உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில்வே மேம்பால ஆரம்ப கட்ட பணிகள் துவக்கம்

ரயில்வே மேம்பால ஆரம்ப கட்ட பணிகள் துவக்கம்

பழநி:பழநி புதுதாராபுரம் ரோட்டில் ரயில்வே கிராசிங் பகுதியில் மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளது. பழநி புதுதாராபுரம் ரோட்டில் சத்யா நகர் அருகே உள்ள ரயில்வே கிராசிங் பகுதியில் அங்குள்ள மனநல காப்பகம் துவங்கி கலிக்கநாயக்கன்பட்டி பிரிவு வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் 1.1 கி.மீ., நீளத்திற்கு 17 துாண்களுடன் 745 மீட்டருக்கு மேம்பால கட்டுமான பணிகள் நடக்கிறது. ரயில்வே துறை சார்பில் 2 துாண்களும் கட்டும் நிலையில் மேம்பாலத்தில் 17.2 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இந்நிலையில் மேம்பால துாண்கள் அமைக்க ஜேசிபி இயந்திரம் மூலம் குழிகள் எடுத்தல் உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளது. ரயில்வே மேம்பால பணிக்காக பழநி போலீசாரால் ஏற்கனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை