உள்ளூர் செய்திகள்

 பால்குட ஊர்வலம்

வடமதுரை: வடமதுரை மேற்கு ரதவீதியில் ஸ்ரீமத் சித்தி முக்தி விநாயகர் கோயில் 1910ல் அமைக்கப்பட்டது. இங்கு 1996, 2011, 2023 ஆண்டுகளில் கும்பாபிஷேக விழாக்கள் நடந்தன. இன்று (ஆக.,26) 116ம் ஆண்டு வருடாந்திர பூஜை நடக்கிறது. இதற்காக நேற்று கள்ளியடி குருநாதர் மடத்தில் இருந்து மங்கம்மாள் கேணி வழியே கோயிலுக்கு தீர்த்தம், பால் குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். இன்று காலையில் யாகவேள்வி பூஜைகள், அன்னதானம், மாலையில் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீமத் சித்தி முக்தி விநாயகர் சேவை அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை