உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடையில் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இடைவிடாது பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானல், தாண்டிக்குடியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று கொடைக்கானலில் காலை 10:30 மணிக்கு துவங்கிய மழை மாலை 4:00 மணி வரை இடைவிடாது பெய்தது. குறைவான அளவிலேயே வந்த சுற்றுலா பயணிகளும் விடுதிகளில் முடங்கினர். நகரை பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. வெள்ளி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ