அறிவியல் கண்காட்சி
பழநி: பழநி கார்த்திக் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஏ.டி.எம்., இயந்திரம், ஏவுகணை மூலம் பூமி தோன்றியது குறித்த விளக்கம், கலப்படங்களை கண்டறிவது, மனிதனின் ரத்த வகையை கண்டறிவது குறித்து விளக்கினர். தாளாளர் குப்புசாமி, பிரியதர்ஷினி,முதல்வர் சந்திரசேகர் கலந்து கொண்டனர்.