ஸ்கேட்டிங் விழிப்புணர்வு
பழநி:பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்த பிரகதீஷ் 10, யுவஸ்ரீ 9, இருவரும் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றவர்கள். சட்டசபை தேர்தலில் நூறு சதவீத ஓட்டளிக்க வலியுறுத்தி திண்டுக்கல் ரோட்டில் ஒட்டன்சத்திரம் வரை பதாகை ஏந்தி 'ஸ்கேட்டிங்' செய்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.