முப்பெரும் விழா
வேடசந்துார்: விட்டல்நாயக்கன்பட்டி அமைதி கல்வியல் கல்லுாரியில் உலக மகளிர் தின விழா, பாலின பாகுபாடு இல்லாத சமூகநீதிக்கான கருத்தரங்கம், கலாசார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா எனும் முப்பெரும் விழா நடந்தது. எரியோடு வட்டார மருத்துவர் பொன்மகேஸ்வரி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பிரேமா, ஐ.டி.ஐ., பயிற்சியாளர் ஜோதிமணி முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை, தலைமை மருத்துவர் லோகநாதன், திண்டுக்கல் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சுகன்யா, டெல்லி வழக்கறிஞர் கிரி பிரசாத் பேசினர். ஒருங்கிணைப்பாளர் சசிகலா நன்றி கூறினார்.