பூப்பந்தில் சாதித்த விவேகானந்தா பள்ளி
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பழநி கல்வி மாவட்ட சி.குறைவட்ட அளவிலான 19 வயதிற்கு உட்பட்ட பூப்பந்து போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தனர். மாவட்ட போட்டியில் 3ம் இடம் பிடித்தனர். வெற்றி மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் கண்ணன் ஆகியோரை பள்ளி தாளாளர் கே.ரங்கசாமி, தலைமை ஆசிரியர் எஸ்.ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியை எஸ் செல்வராணி பாராட்டனர்.