உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஓட்டு சாவடி மாற்றம்;ஆர்ப்பாட்டம்

 ஓட்டு சாவடி மாற்றம்;ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டு:விருவீடு அருகே கம்பூதி நாயக்கன்பட்டி கள்ளர் தொடக்கப் பள்ளியில் அதனை சுற்றிய எம்.ஜி.ஆர். நகர், மாயாதிபுரம், கீழ் அச்சனம்பட்டி, மேல்அச்சனம்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு ஓட்டு சாவடி இருந்தது. இந்த தேர்தலில் ஓட்டு சாவடியை கீழ்அச்சனம்பட்டி மேல்அச்சனம்பட்டிக்கு பிரித்து வெகு துாரம் அலைக்கழிக்க படுவதாக கிராமத்தினர் குற்றம் சாட்டி கள்ளர் தொடக்கப்பள்ளி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். உதவி தேர்தல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த தேர்தலில் பழைய முறைப்படியே சாவடி அமைப்பதாக தெரிக்க கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ