உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் இன்று நவராத்திரி அம்புசேவை

சென்னிமலையில் இன்று நவராத்திரி அம்புசேவை

சென்னிமலையில் இன்று நவராத்திரி அம்புசேவைசென்னிமலை, அக்.12 -நவராத்திரி விழாவை ஒட்டி, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், ஒன்பது நாட்களாக சுவாமிக்கு கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. முருகப்பெருமானுக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்பட்டது. நவராத்திரி, 10-வது நாளான இன்று மாலை விஜயதசமியை முன்னிட்டு அம்புசேவை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக இன்று மாலை அசுரனை வதம் செய்ய, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முத்துக்குமாரசுாமி குதிரை வாகனத்தில் புறப்படுவார். அப்போது வள்ளி-, தெய்வானை தனி சப்பாரத்தில் உடன் வருவர். சுவாமிகள் ராஜவீதிகள் வழியாக வலம் வந்து பிராட்டியம்மன் கோவில் வாசலை அடையும்.அங்கு சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ராமநாத சிவச்சாரியார் தலைமையில் முருகப்பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜை நடக்கும். அதன் பிறகு வண்ணாசூரன் என்ற அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன் தலைமையில் பணியாளர்ள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ