உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்டத்தில் சராசரியாக 9.88 மி.மீ., மழை

மாவட்டத்தில் சராசரியாக 9.88 மி.மீ., மழை

மாவட்டத்தில் சராசரியாக 9.88 மி.மீ., மழைதிருப்பூர்:-திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை தொடர்ந்து பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 9.88 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.அதிகபட்சமாக குண்டடத்தில் 45 மி.மீ., - அவிநாசியில், 36; வட்டமலைக்கரை ஓடையில் 28 மி.மீ.,க்கு மிதமான மழை பெய்தது. கலெக்டர் முகாம் அலுவலக பகுதிகளில் 14 மி.மீ., - மடத்துக்குளத்தில் 10; உடுமலையில், 9; உப்பாறு அணையில், 9; தாராபுரத்தில், 8; வெள்ளகோவிலில் 8 ஊத்துக்குளியில் 7.50; நல்லதங்காள் ஓடையில் 4; திருமூர்த்தி அணையில், 4; திருமூர்த்தி அணையில் (ஐ.பி.,), 4; திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதிகளில் 3 மி.மீ.,க்கு லேசான மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் தெற்கு, கலெக்டர் அலுவலக பகுதிகள், மூலனுார், அமராவதி அணை, காங்கயம் பகுதிகளில் மிக லேசான மழை பெய்தது.நேற்றைய நிலவரப்படி, திருமூர்த்தி அமராவதி அணையில், 51.74 அடிக்கு நீர் மட்டம் உள்ளது. திருமூர்த்தி அணையில், 50.02 அடியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை