உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நுகர்வோர் அமைப்புகலந்தாய்வு கூட்டம்

நுகர்வோர் அமைப்புகலந்தாய்வு கூட்டம்

நுகர்வோர் அமைப்புகலந்தாய்வு கூட்டம்ஈரோடு:ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், ஈரோடு தொழிலாளர் துணை ஆய்வர், முத்திரை ஆய்வர், உதவி ஆய்வர், மாவட்ட நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் நடந்தது. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.எடையளவு, மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருட்கள் அதிகப்பட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உரிய அறிவிப்புகள் இன்றி விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம். ஆய்வின்போது முரண்பாடு கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ