உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

ஈரோடு:ஈரோடு, புதுமை காலனியை சேர்ந்தவர் சரவணன் மனைவி மரகதம், 42; ஈரோடு அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர். இவரது மகன் ஸ்ரீவிக்ரம், 23, கட்டட தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. கடந்த, 20ல் மது போதையில் இரவில் வீட்டுக்கு வந்த விக்ரம், வீட்டில் சமைக்காததால் பீரோ கண்ணாடியை கையால் குத்தி உடைத்தார். இதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையறிந்து விக்ரமின் சகோதரி, அவரது கணவன் வீட்டுக்கு வந்து விக்ரமை சமாதானம் செய்தனர். வீட்டில் துாங்கும்படி விக்ரமிடம் கூறிவிட்டு, மரகதத்தை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த விக்ரம், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !