சித்தோட்டில் பா.ஜ.,வினர் தேசியக்கொடி ஊர்வலம்
பவானி: பஹல்காமில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளை, ஆப்பரேஷன் சிந்துார் பெயரில் தாக்குதல் நடத்தி ஒழித்துக்கட்டிய, இந்திய ராணுவ வீரர்களை பாராட்டும் வகையில், சித்தோடு நால்ரோட்டில் ஈரோடு ஒன்றிய பா.ஜ., சார்பில், தேசியக்கொடி ஏந்தி, தேச ஒற்றுமை பேரணி நேற்று நடந்தது. இதில் பா.ஜ.,வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.