பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்
கோபி:பஹல்காமில் தாக்குதலை கண்டித்து, தேச விரோத வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தினரை வெறியேற்ற நடவடிக்கை எடுக்க கோரி, ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், கோபியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநில செயலாளர் மலர்க்கொடி உட்பட, 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.