உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி

ஈரோடு: ஈரோடு சூளை பி.பி.கார்டனை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி மணிகண்டன். இவருடைய மகன் தஷ்வந்த், 6; ஒன்றாம் வகுப்பு மாணவன். வீட்டின் முன்பு தஷ்வந்த் நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து பெற்றோர் பார்த்தபோது காணவில்லை. பதறிப்போய் தேடியபோது வீட்டு முன்புள்ள தண்ணீர் தொட்டிக்குள் கிடந்தான். ௮ அடி ஆழ தொட்டியில் ௪ அடிக்கு தண்ணீர் இருந்ததால் சிறுவன் மூழ்கி விட்டது தெரிய வந்தது. உடனடியாக மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !