மேலும் செய்திகள்
மனைவி பிரிந்த ஏக்கம் வாலிபர் விபரீத முடிவு
06-Apr-2026
பவானி:-சித்தோடு அருகே ஆர்.என்.புதூர், தேவாபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி, 39; பெருந்துறை, சிப்காட் தனியார் நிறுவன ஊழியர். மனைவி, இரு மகள்கள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடன் பெற்று வீடு கட்டியுள்ளார். தவணை கட்ட முடியாமல் தவித்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரின் மனைவி கதவை உடைத்து, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Apr-2026