குடிமைப்பணி தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் 16ல் நடக்கிறது
ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள, காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாநகராட்சி இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும், 16ம் தேதி இந்திய குடிமை பணித்தேர்வுக்கு கற்றல் வழிகாட்டுதல் மற்றும் பகுப்பாய்வு பற்றிய விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.அனுமதி இலவசம். பங்கேற்க விரும்புவோர் https://www.erodesmartcity.org/participant.registration/ என்ற இணையதளத்தில், 16ம் தேதி காலை, 8:௦௦ மணி வரை பதிவு செய்யலாம்.