உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1.50 லட்சம் மாயம் போலீசாரிடம் புகார்

ரூ.1.50 லட்சம் மாயம் போலீசாரிடம் புகார்

ஈரோடு, தென்காசியை சேர்ந்தவர் குமார், 41. இவர், சிவகிரி புது விநாயகர் கோவில் தெருவில் வசிக்கிறார். கடந்த, 31ல் குமாரின் மனைவி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். அரை மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த 5ம் தேதி வீட்டில் இருந்த பீரோவை குமார் திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த ரூ.1.50 லட்சம் மாயமானது தெரியவந்தது. வீட்டின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பீரோவில் இருந்த பணம் எவ்வாறு திருட்டு போனது என தெரியவில்லை. இதுபற்றி சிவகிரி போலீசில் குமார் புகார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி