உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி பாசனத்துக்கு திறப்பு முற்றிலும் நிறுத்தம்

கீழ்பவானி பாசனத்துக்கு திறப்பு முற்றிலும் நிறுத்தம்

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணைக்கு உட்பட்ட கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதியில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. இதனால் வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட, 2,300 கன அடி தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்த நிலையில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து, 400 கன அடி தண்ணீர் நேற்று வெளியேற்றப்பட்டது. நேற்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, 496 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 102.55 அடி; நீர் இருப்பு 30.7 டி.எம்.சி.,யாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ