கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி துவக்கம்
ஈரோடு:ஈரோடு கொங்கம்பாளையத்தில் உள்ள, கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026-27ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியை, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா துவக்கி வைத்தார். பயிற்சியாளர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார். பயிற்சி நிலைய முதல்வர் பிரகாஷ் வரவேற்றார். துணை பதிவாளர் பரிமளா, விரிவுரையாளர்கள் ஸ்ரீதர், தியாகராஜன் ஆகியோர் பேசினர்.துணை பதிவாளர் யசோதாதேவி, விரிவுரையாளர்கள் தங்கமுத்து, சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். பணியாளர் ஜனனி நன்றி கூறினார்.