ஈரோடு சுதா மருத்துவமனையில் இரு கல்லீரல் மாற்று ஆபரேஷன்
ஈரோடு: தர்மபுரி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த, 18 வயது சிறுவனிடம் கல்லீரல் எடுக்கப்பட்டு, ஈரோடு சுதா மருத்து-வமனையில், கடந்த, 14ம் தேதி, 63 வயது ஆணுக்கு பொருத்தப்-பட்டது. நோயாளி நலமுடன் வீடு திரும்பினார். இதேபோல் மூளைச்சாவு அடைந்த, 55 வயதுப் பெண்ணிடம் இருந்து, சுதா மருத்துவமனை சார்பில், கல்லீரல் மற்றும் சிறுநீ-ரகம் உறுப்பு தானமாக பெறப்பட்டது. சுதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவருக்கு வெற்றிகரமாக பொருத்-தப்பட்டது. மேலும் பெண்ணின் இருதயம், சென்னை எம்.ஜி.எம்., மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சுதா மருத்துவமனையில் இதுவரை, 55 நபர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக, டாக்டர் சுதாகர் தெரிவித்தார். கல்லீரல் பிரச்னை இருப்பவர்கள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சுதா மருத்துவமனையில் பதிவு செய்-யலாம். தொடர்புக்கு, -99444-87577 என்ற எண்ணை அணுகலாம்.