உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெள்ளகோவில் அருகே லாரி மோதி டிரைவர் பலி

வெள்ளகோவில் அருகே லாரி மோதி டிரைவர் பலி

வெள்ளகோவில், திண்டுக்கல் மாவட்டம், பொன்மாந்துறையை சேர்ந்த முரளி, 38, என்பவர் ராட்டினத்துாரி பொருட்காட்சி பொருட்களை, ஈச்சர் வேனில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு காங்கேயத்தில் இருந்து கரூர் நோக்கி சென்றார். வெள்ளகோவில் அருகே குருக்கத்தி என்ற இடத்தில், வேனை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு பின்னால் நின்று கொண்டிருந்தார். அதே திசையில் பின்னால் வந்த டாரஸ் லாரி முரளி மீது மோதியது. இதில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.லாரி ஓட்டி வந்த தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன், 35, என்பவர் மீது வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை