ஈரோடு ஏ.டி.எஸ்.பி., இடமாற்றம்
ஈரோடு: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட போலீசில், இரு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதி-காரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி ஈரோடு ஏ.டி.எஸ்.பி., (தலைமையிடம்) விவேகானந்தன், கோவை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., பிரேமானந்தன், ஈரோட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.