உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 15 ஆண்டுகளுக்கு முன் கணவன் மாயம்; போலீசில் மனைவி புகார்

15 ஆண்டுகளுக்கு முன் கணவன் மாயம்; போலீசில் மனைவி புகார்

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் கக்கன் நகரை சேர்ந்தவர் பழனியப்பன், 66; இவர் மனைவி அங்கம்மாள், 65; தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பழனியப்பன் பழைய இரும்பு கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர். 15 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அங்கம்மாள் நீதிமன்ற உத்தரவை பெற்று, அதன் அடிப்படையில் கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை