கொடிவேரி தடுப்பணை வெறிச்
கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. இதனால் குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கின்றனர். வழக்கமாக வார விடுமுறை நாட்களில், அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், வானம் நேற்று மேக மூட்டமாக இருந்ததால், குறைவான சுற்றுலா பயணிகளே வருகையால், தடுப்பணை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.