மா.திறனாளிகள் ஆலோசனை
தாராபுரம் :மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், தாராபுரத்தில் உள்ள இ.கம்யூ., அலுவலகத்தில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார்.மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் காதொலி கருவி, அடையாள அட்டை மற்றும் சக்கர நாற்காலி வாகனம் பெறுதல் உள்ளிட்ட உதவிகளை பெற தேவையான ஆலோசனை வழங்கப்பட்டது. தாராபுரம் பகுதி மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.