உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 10ம் வகுப்பு மாணவருக்கு செய்முறை தேர்வு துவக்கம்

10ம் வகுப்பு மாணவருக்கு செய்முறை தேர்வு துவக்கம்

ஈரோடு: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 11ம் தேதி துவங்கி ஏப்.,6ல் நிறைவு பெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு, 210 அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள், 109 தனியார் பள்ளிகளை சேர்ந்த, 24,470 மாணவ, மாணவிகள், 856 தனி தேர்வர் என, 25,326 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதற்காக, 118 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 545 பேர் ஸ்கிரைப் மூலம் தேர்வு எழுதவுள்ளனர்.மாவட்டத்தில், 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. காலை, 9:00 மணிக்கு துவங்கி, 11:00 மணி வரை நடக்கிறது. வரும், 28ல் செய்முறை தேர்வு நிறைவு பெறும். ஏற்பாடுகளை பள்ளி கல்வி துறை மற்றும் தேர்வு துறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை