பழனி பாதயாத்திரை பக்தர்களுக்காக சாலையோரத்தில் புற்கள் அகற்றம்
காங்கேயம்: தை மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், காங்கேயம் வழி-யாக பழனி மலை கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்வர்.சமீபத்தில் பெய்த மழையால் சாலையோரத்தில் அதிக அளவில் புல் வளர்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் நடைபயணம் செய்ய சிரமமாக இருக்கிறது.இதையடுத்து காங்கேயம் நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி., வாகனத்தில், சாலையோர புற்கள், செடி மற்றும் களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதே பக்-தர்கள் பாதயாத்திரையை தொடங்கி விட்டனர்.