தொழில் நுட்ப தேர்வு;861 பேர் ஆப்சென்ட்
ஈரோடு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான போட்டி தேர்வு (டிப்ளமோ, ஐ.டி.ஐ., நிலை), ஈரோடு தாலுகாவில், 10 மையங்களில் நேற்று நடந்தது. மொத்தம், 2,910 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், 2,049 பேர் எழுதினர். 861 பேர் தேர்வு பங்கேற்கவில்லை.