அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம் துவக்கம்
ஈரோடு, அறநிலையத்துறை சார்பில் நுாறு பக்தர்களை, அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லும் ஆன்மிக பயணம், திண்டல் வேலாயுதசாமி கோவிலில் நேற்று தொடங்கியது. கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார். இதில் மூன்று பஸ்களில் பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அனைத்து ஏற்பாடுகளும் அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.