கோவிலில் அறங்காவலர் குழுவினர் பொறுப்பேற்பு
ஈரோடு:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படுகிறது. இதன்படி ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக சுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டார்.உறுப்பினர்களாக சுந்தர்ராஜன், ராணி, ஹரிஹரன், ராவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனவ். இக்குழுவினர் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்வில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டனர்.