இளம்பெண், மாணவி மாயம்
பவானி: சித்தோடு அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சிவராமன், 35; டையிங் பேக்டரி தொழிலாளி. இவரின் மனைவி மஞ்சு, 23; நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாத நிலையில் கணவரை பிரிந்து, அக்கா வீட்டில் மஞ்சு ஓராண்டாக வசித்தார். மூன்று நாட்களுக்கு முன் கூடுதுறை கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. சிவராமன் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர் புகாரின்படி சித்-தோடு போலீசார் தேடி வருகின்றனர்.* சித்தோடு அருகே ராயபாளையத்தை சேர்ந்தவர் பரந்தாமன், 38; இவரின், 15 வயது மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறி பள்ளி சென்-றவர், வீடு திரும்பவில்லை. பரந்தாமன் புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.