உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வு

அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வு

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுரி மாணவர்கள் 50 பேர் புதுச்சேரியில் உள்ள டி.வி.எஸ்., லுாகாஸ் நிறுவண நேர்காணலில் தேர்வு பெற்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் முன்றாம் ஆண்டு இயந்திரவியல் படிக்கும் மாணவர்கள் புதுச்சேரியில் உள்ள லுாகாஸ் டி.வி.எஸ்., நிறுவண நேர்காணலில் கலந்து கொண்டு 50  மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். நேர்காணலில் கலந்து கொண்டு தேர்வான மாணவர்களை கல்லுாரி முதல்வர் லலிதா, முதல்வரின் நேர்முக உதவியாளர் சண்முகம் மற்றும் துறை தலைவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி