வாகன சோதனை 26 பேர் மீது வழக்கு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் வீதிமுறைகளை மீறிய 26 பேர் மீது வழக்குப்பதிந்தனர். சங்கராபுரம் கடைவீதி மும்மு னை சந்திப்பில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது, லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, அதிவேகமாக சென்றது, மது போதையில் ஓட்டியது என போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் சென்ற 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.