கிருஷ்ண பெருமானுக்கு அஷ்டமி சிறப்பு வழிபாடு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆனந்த கிருஷ்ண பெருமானுக்கு அஷ்டமி தினத்தையொட்டி, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. அதனையொட்டி, ராதா, ருக்மணி, கிருஷ்ணர் உள்ளிட்ட உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. திரளான பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.