உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிங்கார வேலன் தலைமை தாங்கினார். அலுவலக செயலாளர் இளையராணி, மகளிர் அணி அன்பரசி முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் அய்யாசாமி, மாநில செயலாளர் திருமாறன், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபிரகாஷ், வினோதன் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், பெரிய சிறுவத்துார் கிராமத்தில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !